×

தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்

 

பந்தலூர்,ஏப்.29: பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது.  நீலகிரி மாவட்டம்,நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜாரில் நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள்,வியாபாரிகள் மிகவும் சிறமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நிறைந்த தேவாலாவில் கழிவுநீர் அமைக்கும் பணியினை துரிதமாக செய்யவும், தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம் appeared first on Dinakaran.

Tags : Dewala Bazaar ,Bandalur ,Dewala Bazar ,Devala Bazar ,Nellialam Municipality ,Nilgiri District ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...